Welcome to free classifieds at atnow.in

தமிழ் இசை அமைப்பாளருக்கு கன்னட சினிமா அகாடமி விருது

06-04-2018
7 years ago

தமிழ் இசை அமைப்பாளருக்கு கன்னட சினிமா அகாடமி விருது தமிழ் இசை அமைப்பாளரான ராஜ் பாஸ்கருக்கு கன்னட சினிமா அகாடமி 'சாதனையாளர் விருது' வழங்கி சிறப்பித்துள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் போதே, ராஜ் பாஸ்கர் இசையின் பால் ஈர்க்கப்பட்டதற்கு அவரது தந்தையே காரணம் என்று தான் கூறவேண்டும். ஏனெனில் அவரது தந்தையான காளிதாஸ் ஏ‌வி‌எம் ரெகார்டிங் தியேட்டரில், சவுண்ட் ஆபரேட்டராக பணியாற்றிய காலத்தில், ராஜ் பாஸ்கர் அவரை சந்திக்க அங்கு அடிக்கடி செல்வதுண்டு. பல வேளைகளில் இசையை கேட்டுக்கொண்டே மெய்மறந்து இருந்த ராஜ் பாஸ்கரிடம் ஒரு முறை அவரது தந்தை 'உனக்கு இசையில் அவ்வளவு ஆர்வமா' என்று கேட்டுள்ளார். அதன் பிறகு அவரை வயலின் கற்றுக்கொள்ள அனுப்பியுள்ளார். இசை அமைப்பாளர் எம் .எஸ். விஸ்வநாதன் இசை குழுவில் இருந்த ராஜப்பா மாஸ்டரிடம் கிளாசிக்கல் வயலின் கற்றேன். அதன் பின்பு தன்ராஜ் மாஸ்டரிடம் வெஸ்டர்ன் வயலின் கற்றேன். அங்கு ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் கீ போர்டு கற்றுக்கொண்டு இருந்தார். எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு உண்டு. அவரோடு இணைந்து தன்ராஜ் மாஸ்டரிடம் பயிற்சி பெற்றதை பெருமையாக கருதுகிறேன். எனக்கு இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் பல உதவிகள் செய்துள்ளனர். குறிப்பாக கணேஷ் எனக்கு அவருடைய இசைக்குழுவில் என்னையும் வயலின் வாசிக்க அனுமதித்தார். பழம்பெரும் நடிகரான முத்துராமன் நடித்த 'வாடகை வீடு' படத்தில் நானும் வயலின் வாசிக்க ஆரம்பித்தேன். மேலும் 'பூக்களை பறிக்காதீர்கள்' படத்தில் வரும் 'பூக்களைத்தான் பறிக்காதீங்க' பாடலுக்கும் நானும் வயலின் வாசித்தேன். அதன் பின்னர் நான் எம்.எஸ்.வி. இசை குழுவிலும் இடம்பெற்றேன். எம்.எஸ்.வி. மற்றும் அவரது உதவியாளரான ஜோசப் கிருஷ்ணா ஆகியோர் எனக்கு செய்த உதவிகள் ஏராளம். நான் இசை அமைப்பாளராக அறிமுகமான எனது முதல் தமிழ் படம் 'தேரோடும் வீதியிலே' ஆகும். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் கீ போர்டு வாசித்தார் என்பது சிறப்பு.



தெலுங்கில் எனது முதல் படமான 'பேதாள மாந்த்ரீகுடு' வில் பிரபல நடிகர் நரசிம்ம ராஜு தான் ஹீரோ. கடந்த 2016ம் ஆண்டு தெலுங்கு நடிகர் சிவாஜி நடித்து வெளிவந்த 'சீசா' என்ற தெலுங்கு படத்திற்கு நான் இசை அமைத்தேன். தமிழ், மலையாள இசை அமைப்பாளரான எஸ்.பி. வெங்கடேஷ் தான் எனது வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அவர் மூலம் தான் நான் இசையின் பல நுணுக்கங்களை தெரிந்து கொண்டேன். குறிப்பாக குறைவான நேரத்தில் மிகச்சரியாக இசை அமைப்பது எப்படி என்பதை கற்றுக்கொண்டேன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஒரியா, போஜ்பூரி என பல மொழி படங்களுக்கு ரி-ரெகார்டிங் செய்தேன். இதுவரையில் 150 படங்கள் பண்ணி விட்டேன். குறிப்பாக இளைய தளபதி நடித்த 'குஷி' படத்தின் போஜ்பூரி ரீமேக் படத்திற்கும் நான் தான் ரி-ரெகார்டிங் செய்தேன். சமீபத்தில் கின்னஸ் விருது பெற்ற 'அகடம்' மற்றும் 'நாகேஷ் திரையரங்கம்' போன்ற படத்திற்கும் நான் தான் BGM செய்தேன். நான் எப்பொழுதெல்லாம் துவண்டு போகிறேனோ, அப்பொழுதெல்லாம் எனது தந்தை 'இலக்கை அடைவதை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படு' என்று கூறுவார். அவரின் பொன்மொழிகள் என்னை வழி நடத்தி கொண்டு வருகின்றது. எனது தாயாரின் பெயர் பாப்பாத்தி அம்மாள். அனைத்து தரப்பு மக்களையும் எனது இசை சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு கொண்டு இருக்கின்றேன். இசை துறையை பொறுத்தமட்டில் அற்பணிப்பு மிக முக்கியமாகும். இன்றைய புது இசை அமைப்பாளருக்கு நான் சொல்வதெல்லாம் 'இசையோடு வாழுங்கள்' என்பது தான். இவர் அதிக படங்களுக்கு BGM செய்ததர்க்காக இவருக்கு 'சாதனையாளர் விருது' வழங்கப்பட்டுள்ளது. ஸ்வாதி அம்பரீஷ் சார்பில் கர்நாடக கலே மதுரா சாதனே அகாடமி என்ற அமைப்பு இவருக்கு இந்த விருதினை வழங்கியுள்ளது. ராஜ் பஸ்கரின் மனைவியும், நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

About Us

AtNow website meant a place where you can find what you are looking for. AtNow will do all that you want. All you need is to post a classified advertisement on free website and then you will get responses accordingly.
© 2025 atnow.in All rights reserved.